பசுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வதைத் தடுக்க தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட் டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் அஸ்வினி குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவு விவரம்: பல்வேறு மாநிலங்கள் சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி பசுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது ஊர்ஜிதமாகிறது. பசு இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும், கால்நடை பராமரிப்புத் துறையும் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
மிகத் தீவிரமான பிரச்னை என்பதால் பசு இனத்தை அழியாமல் தடுத்து நிறுத்துவதற்கு தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்துவிட்டு பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு அந்த அமர்வு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.