திருமலையில் 4 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருமலையில் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் 4 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து
Published on
Updated on
1 min read

திருமலையில் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் கடந்த 5 நாள்களாக பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க பல மணிநேரம் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை உள்ளிட்ட 4 நாள்கள் தொடர்ந்து விஐபி பிரேக் தரிசனம், பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நாள்களில் புரோட்டோகால் விஐபிகளுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com