இந்திய ரயில்வே 18 நவீன ரக டீசல் என்ஜின்களை மியான்மருக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது. அவற்றின் மதிப்பு ரூ.200 கோடியாகும்.
இந்த ரயில் என்ஜின்கள் அனைத்தும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ரயில் என்ஜின் தயாரிப்பு மையத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக 6 ரயில் என்ஜின்கள் அடுத்த மாதம் மியான்மருக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. மீதமுள்ள 12 என்ஜின்களும் டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இவை அனைத்தும் பல்வேறு நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறைந்த எரிபொருள் செலவில் அதிக சக்தியுடன் செயல்படுவது, சிறப்பான பிரேக் வசதி போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் காரணமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ரயில் என்ஜின்களை மியான்மர் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து வாங்கி வருகிறது.
மியான்மருக்கு மட்டுமின்றி இலங்கை, வங்கதேசம், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்திய ரயில்வேயின் உற்பத்தி மையங்கள்தான் என்ஜின்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.