புதுதில்லி: புதுதில்லியில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தில்லி தில்ஷாத் கார்டனில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 4 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. தீ விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.