கோவாவில் வெங்காயம் போல் விற்பனையாகும் "சிம்' கார்டுகள்

கோவா மாநிலத்தில் சமூக விரோதிகள் வெங்காயம் வாங்குவதைப் போல செல்லிடப் பேசிகளுக்கான "சிம்' அட்டைகளை மிக எளிதில் வாங்கி வருவதாக அந்த மாநில காவல்துறை தலைவர் முக்தேஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.
Published on
Updated on
1 min read

கோவா மாநிலத்தில் சமூக விரோதிகள் வெங்காயம் வாங்குவதைப் போல செல்லிடப் பேசிகளுக்கான "சிம்' அட்டைகளை மிக எளிதில் வாங்கி வருவதாக அந்த மாநில காவல்துறை தலைவர் முக்தேஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
போலி ஆவணங்களை சமர்ப்பித்து சமூக விரோதிகள் மிக எளிதில் "சிம்' அட்டைகளைப் பெற்று வருகின்றனர்.
வேறு நபர்களின் புகைப்படம், பெயர், போலிக் கையெழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களால் "சிம்' அட்டைகளைப் பெற முடிகிறது.
தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்களிடம் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை நேரில் சென்று சரிபார்ப்பது கிடையாது. இதனால், கோவாவில் "சிம்' அட்டைகள் வெங்காயம், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளைப் போல விற்பனையாகின்றன. வாடிக்கையாளர் அடையாள விதிமுறையை (கேஒய்சி) நிறுவனங்கள் அலட்சியம் செய்வது, சமூக விரோதிகளுக்கு
சாதகமாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக, பல வழக்குகளில் "சிம்' அட்டைகளை உண்மையிலேயே பயன்படுத்தியவர் யார் என்பதைக் கண்டறிவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com