கோவா மாநிலத்தில் சமூக விரோதிகள் வெங்காயம் வாங்குவதைப் போல செல்லிடப் பேசிகளுக்கான "சிம்' அட்டைகளை மிக எளிதில் வாங்கி வருவதாக அந்த மாநில காவல்துறை தலைவர் முக்தேஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
போலி ஆவணங்களை சமர்ப்பித்து சமூக விரோதிகள் மிக எளிதில் "சிம்' அட்டைகளைப் பெற்று வருகின்றனர்.
வேறு நபர்களின் புகைப்படம், பெயர், போலிக் கையெழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களால் "சிம்' அட்டைகளைப் பெற முடிகிறது.
தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்களிடம் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை நேரில் சென்று சரிபார்ப்பது கிடையாது. இதனால், கோவாவில் "சிம்' அட்டைகள் வெங்காயம், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளைப் போல விற்பனையாகின்றன. வாடிக்கையாளர் அடையாள விதிமுறையை (கேஒய்சி) நிறுவனங்கள் அலட்சியம் செய்வது, சமூக விரோதிகளுக்கு
சாதகமாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக, பல வழக்குகளில் "சிம்' அட்டைகளை உண்மையிலேயே பயன்படுத்தியவர் யார் என்பதைக் கண்டறிவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு!

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவை தொடக்கம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


