மும்பைக்கு ரகசியமாக வந்து சென்றார் தாவூத் இப்ராஹிமின் மனைவி: தாவூதின் சகோதரர் வாக்குமூலம்

பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மனைவி மெஹஜபின் ஷேக், மும்பைக்கு கடந்த ஆண்டு ரகசியமாக வந்து சென்றதாக தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காஸ்கர்,
மும்பைக்கு ரகசியமாக வந்து சென்றார் தாவூத் இப்ராஹிமின் மனைவி: தாவூதின் சகோதரர் வாக்குமூலம்

பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மனைவி மெஹஜபின் ஷேக், மும்பைக்கு கடந்த ஆண்டு ரகசியமாக வந்து சென்றதாக தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காஸ்கர், காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், தாணே, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான நிறுவன அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், இக்பால் காஸ்கர், அவரது கூட்டாளிகள் 2 பேரை அந்த மாநில போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையின்போது, தாவூத் இப்ராஹிம், அவரது குடும்பத்தினர் குறித்து காஸ்கரிடம் பல்வேறு கேள்விகளை போலீஸார் கேட்டுள்ளனர். அப்போது காஸ்கர், தாவூத் குறித்து பல்வேறு புதிய தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
போலீஸ் விசாரணையின்போது, பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் இருப்பதாக காஸ்கர் வாக்குமூலம் அளித்திருந்தார். அதையடுத்து, தாவூத் இப்ராஹிமின் மனைவி மெஹஜபின் ஷேக் என்ற ஜூபினா ஜரின், மும்பையில் உள்ள தனது தந்தை சலிம் காஷ்மீரியை சந்திப்பதற்காக மும்பைக்கு கடந்த ஆண்டு வந்தார். மும்பையில் சலிம் காஷ்மீரி, அவரது குடும்பத்திரைச் சந்தித்த ஜுபினா ஜரின், நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று காஸ்கர் தெரிவித்துள்ளார்.
விசாரணையின்போது, பாகிஸ்தானின் கராச்சி நகரில் தாவூத் இப்ராஹிம் தங்கியுள்ள 4 வீடுகளின் முகவரியையும் காஸ்கர் அளித்தார். இதேபோல், கராச்சியில் ஒரே இடத்தில் தாவூத் இப்ராஹிம், அவரது சகோதரர் அனீஷ் இப்ராஹிம், நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீல் ஆகியோர் வசித்து வருவதாகவும், ஈத் பண்டிகையின்போது மும்பையில் உள்ள தனது குடும்பத்தினருடன் அனீஷ் தொலைபேசியில் பேசுவது வழக்கம் என்றும் காஸ்கர் தெரிவித்தார்.
காஸ்கரிடம் தாவூத் இப்ராஹிமின் தற்போதைய உடல் நலம் குறித்து போலீஸார் கேட்டனர். அந்த கேள்விக்கு, தாவூத் இப்ராஹிம் நல்ல உடல் நலத்துடன் திடகாத்திரமாக இருப்பதாக காஸ்கர் குறிப்பிட்டார். எந்த நோயினாலும் அவர் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
காஸ்கர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்த அனைத்து கருத்துகளையும், தாணே குற்றப்பிரிவு போலீஸார் சரிபார்த்து வருகின்றனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பைத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் இந்தியாவைவிட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு சென்று விட்டார். எனவே, தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com