தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: வாகன சோதனையில் ரூ.5.80 கோடி பறிமுதல் 

நடைபெறவிருக்கும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த வாகன சோதனையில் ரூ.5.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: வாகன சோதனையில் ரூ.5.80 கோடி பறிமுதல் 

ஹைதராபாத்: நடைபெறவிருக்கும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த வாகன சோதனையில் ரூ.5.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

119 இடங்களை கொண்ட தெலங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

தேர்தலில் ஓட்டுக்காக பணம் தரும் அரசியல் கட்சிகளின் முயற்சியை தடுக்க மாநிலம் முழுவதும் வருவாய்துறை மற்றும் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை சிறப்பு அதிகாரிகள் மாநில போலீசார் துணையுடன் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த வாகன சோதனையில் ரூ.5.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
வாராங்கல் மாவட்டம் ஜன்கான் பகுதியில் உள்ள சோதனைச்சாவடி வழியாக செவ்வாய் இரவு வேகமாக வந்த ஒரு காரை மடக்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடியே 80 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி, இந்த பணத்தை கொண்டுவந்த 3 நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com