தெலங்கானா மக்களை ஏமாற்றிவிட்டது டிஆர்எஸ்

தெலங்கானா மாநில மக்களை, தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஏமாற்றிவிட்டது என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா
தெலங்கானா மக்களை ஏமாற்றிவிட்டது டிஆர்எஸ்

தெலங்கானா மாநில மக்களை, தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஏமாற்றிவிட்டது என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானாவில் வெள்ளிக்கிழமை (டிச. 7) சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு, ஆளும் டிஆர்எஸ் கட்சி தனித்தும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன. பாஜகவும் தேர்தல் களத்தில் உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சுட்டுரையில், தெலங்கானா மக்களுக்காக சோனியா காந்தி வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. தனி மாநிலம் உருவாவதில், நானும் பங்களித்துள்ளேன். ஆனால், தெலங்கானாவில் தற்போது ஆட்சியிலிருப்பவர்கள், தொடர்ந்து உங்களை (மக்கள்) ஏமாற்றி வருகின்றனர்.
இப்போது உங்களது விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக் கூடியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் சேர்ந்து உருவாக்கியுள்ள மக்கள் கூட்டணியே, சமூகத்தில் அனைத்து பிரிவினருக்குமானது. எனவே, அந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எப்போதும் தெலங்கானா மக்களின் பக்கம் நிற்கக் கூடிய அரசை நாங்கள் அமைப்போம் என்று உறுதி கூறுகிறேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com