சென்னை: இருமாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி ராஜஸ்தானில் 59.43 சதவீதமும், தெலங்கானாவில் 56.17 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
200 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் வெள்ளி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி 41.53% வாக்குகள் பதிவாகி இருந்தது. மதியம் 2 மணி நிலவரப்படி சுமார் 55% வாக்குகள் பதிவாகி இருந்தது. மாலை 3 மணி நிலவரப்படி அங்கு 59.43 சதவீத வாக்குகள் பதிவாகியு ள்ளது.
அதேபோல 119 இடங்களை கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி 49.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மணி நிலவரப்படி 56.17 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
இரண்டு தேர்தல்களிலும் மாலை 5 மணியோடு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, அப்போது வரை வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிகிறது.