ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்து: 11 பேர் சாவு

ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்து: 11 பேர் சாவு

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தனர்.

லோரான் எனுமிடத்தில் இருந்து பூஞ்ச் மாவட்டத்துக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மாண்டி பகுதியில் உள்ள பிளேரா எனுமிடத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com