மத்திய பிரதேசத்தில் பாஜக சுலபமாக வெற்றி பெறும்: சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

மத்திய பிரசேதத்தில் பாஜக மிக சுலபமாக வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக சுலபமாக வெற்றி பெறும்: சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை


மத்திய பிரசேதத்தில் பாஜக மிக சுலபமாக வெற்றி பெறும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லாத சூழலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 3 முறையாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பொறுப்பில் சிவராஜ் சிங்  சவுகான் இருந்து வருகிறார். தொடர்ந்து 4-வது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆனால், தொடர்ந்து 15 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் அக்கட்சிக்கு எதிரான அலைகளே எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகளும் பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்ற நிலை காணப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், மாநிலத்தில் பாஜக வெற்றி பெறுமா காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற கருத்துக்கணிப்புகள் இடையே வேறுபாடுகள் நிலவுகிற நிலையில், உறுதியாக எந்தவொரு நிறுவனமும் கணிப்பை தெளிவாக சொல்லவில்லை.

இந்நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்பு தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். நீண்ட நாட்களாக பொதுமக்களுடன் தொடர்பில் உள்ளேன். அனைவரின் வீடுகளிலும் பாஜக உள்ளது. அனைத்து தரப்பு மக்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. அதனால் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பாஜகவுக்கு கடினமான காரியமாக இருக்காது. எளிதில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுவிடுவோம் என்று தெரிவித்தார்.

230 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மத்தியபிரதேச பேரவையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பான்மையை பாஜக பிடிப்பது கடினம் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com