புது தில்லி: தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அக்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் செவ்வாய் காலை 8 மணியில் இருந்து வெளிவரத் துவங்கியுள்ளன.
அதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அக்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி பெற்ற இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கவும், மத்திய பிரதேசத்தில் நீடிக்கும் இழுபறி நிலைக்கு சுமூக தீர்வு காணவும் ஆலோசனை நடக்கும் என்று தெரிகிறது.