மைசூரு அருகே கோயில் பிரசாதம் சாப்பிட்டவர்கள் உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு

மைசூருவில் கோயில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.  
மைசூரு அருகே கோயில் பிரசாதம் சாப்பிட்டவர்கள் உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு

மைசூருவில் கோயில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.  

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள ஹெனூர் எனும் கிராமத்தில் சாம்ராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள கோயில் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11-ஆக சனிக்கிழமை அதிகரித்தது.

மேலும், பிரசாதம் சாப்பிட்ட 72 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்தக் 

கோயில் பிரசாதத்தை சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்ததால் சம்பவப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கோயில் கட்டுவதில் இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com