புதுதில்லி: மேக்கேதாட்டு விவகாரத்தை முன்வைத்து அதிமுக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும், மேக்கேதாட்டு விவகாரத்தை மையப்படுத்தி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்களும் கடும் அமளியில் ஈடுபட்டனனர். இதனால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார் மக்களவை சபாநாயகர் சுமத்ராமகாஜன்.
அதேபோல், மாநிலங்களவையிலும், மேக்கேதாட்டு விவகாரத்தை அதிமுக எம்.பி.க்களும், ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எம்.பி.க்களும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.