தெலங்கானா: உள்ளாட்சித் தேர்தலில் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டுக்கு 50% உச்சவரம்பு

தெலங்கானாவில் உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யும்

தெலங்கானாவில் உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யும் அவசர சட்டத்தை அந்த மாநில அரசு பிறப்பித்துள்ளது.

தெலங்கானா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை 67 சதவீதமாக உயர்த்த அந்த மாநில சட்டப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் சட்டமியற்றப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 34 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க அச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஹைதராபாத் உயர்நீதிமன்றம், எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த உச்சநீதிமன்றம், தெலங்கானா அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, ஜனவரி 11-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அவசரச் சட்டத்தை, தெலங்கானா அரசு பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com