வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 20 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜக-வுக்கு அக்கட்சித் தலைவர் அமித் ஷா கட்டளையிட்டுள்ளார்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான தேரேக் ஓ பிரையன் கூறியதாவது, மேற்கு வங்கத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பது போன்ற மிகக் கடின இலக்குகளை ஏற்படுத்திக்கொள்வதை விடுத்து, இருக்கும் 2 தொகுதிகளையாவது தக்க வைத்துக்கொள்ள பாஜக முயற்சி எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ரசகுல்லாவைப் போன்று பூஜ்ஜியம் தொகுதிகளைத் தான் பெற முடியும் என்று தெரிவித்தார்.