சபரிமலை: 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு 

கேரள மாநிலம், சபரிமலை, நிலக்கல், பம்பா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு ஜனவரி 5 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை: 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு 

பத்தனம்திட்டா:  கேரள மாநிலம், சபரிமலை, நிலக்கல், பம்பா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு ஜனவரி 5 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதை எதிர்த்து பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் போராட்டத்தில் குதித்தனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. ஆனால் போராட்டங்கள் நீடித்ததால் காரணமாக சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சபரிமலை, நிலக்கல், பம்பா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு ஜனவரி 5 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

சபரிமலை, நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜனவரி 5 - ஆம் தேதி வரை நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி. நுவா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com