அரசுமுறைப் பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை ஜோர்டான் சென்றடைந்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

அரசு முறைப்பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன் ஆகிய மூன்று நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், பிரதமர் மோடி, ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அந்நாட்டு மன்னர் அப்துல்லாவை சந்தித்துப் பேசுகிறார்.

இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் நாளை காலை பாலஸ்தீனம் செல்லும் மோடி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடன் ரம்மல்லா நகரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது இருநாடுகளுக்கு இடையே ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் பிப்ரவரி 10-ம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com