புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்பு

புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்பு

புது தில்லி: புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, முகேஷ் குமார் ரசிக்பாய் ஷாஹ், அஜய் ரஸ்தோகி ஆகியோர் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இவர்களது பதவியேற்பின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டிய மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக இருக்கும் நிலையில் 3 நீதிபதிகள் பற்றாக்குறையாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com