உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது சகோதரரைப் பார்ப்பதற்காக 15 நாள்கள் பரோலில் சென்ற இளவரசி, வியாழக்கிழமை மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறைக்குத் திரும்பினார்.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்த வழக்கில் அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது சகோதரர் வடுகநாதனைப் பார்க்க கடந்த அக். 25-ஆம் தேதி 15 நாள் பரோலில் சென்ற இளவரசி, வியாழக்கிழமை மாலை 5.50 மணிக்கு சிறைக்குத் திரும்பினார்.