காங்கிரஸைப் போல ஆள நினைக்கிறார் சந்திரசேகர் ராவ்: தெலங்கானா மண்ணில் மோடியின் பேச்சு

தெலங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அங்கு முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
காங்கிரஸைப் போல ஆள நினைக்கிறார் சந்திரசேகர் ராவ்: தெலங்கானா மண்ணில் மோடியின் பேச்சு


நிஸாமாபாத்: தெலங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அங்கு முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

நிஸாமாபாத்தில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஏதோ ஜாலி போட்டியாக தேர்தலை பார்க்கிறார்கள்.

குடும்ப அரசியலை மேற்கொண்டு வரும் இரண்டு கட்சிகள் என்று குறிப்பிட்டிருக்கும் மோடி, காங்கிரஸ் கட்சி நாட்டுக்காக எதையுமே செய்யாமல் பல ஆண்டுகள் நாட்டை ஆண்டது போல, முதல்வர் சந்திரசேகர் ராவும் மாநிலத்துக்கு எதையுமே செய்யாமல் ஆளலாம் என்று நினைக்கிறார். ஆனால் இந்த முறை அப்படி நடக்காது. 

முதல்வர் சந்திரசேகர் ராவ் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளார். ஜோதிடர்களைத்தான் நம்புகிறார். அவர்கள் சொல்லும் பூஜைகளை செய்கிறார் என்று மோடி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com