இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்
ஜம்மு-காஷ்மீா் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீா் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் ராணுவத்தினா் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாப்குண்ட் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.