கார் விபத்தில் 8 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்ததாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்ததாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
 ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே சலும்பர் நகர்ப்பகுதியில் நர்சரிப் பள்ளி நடத்தி வருபவர் கீதா லடெüட்டி. தனது பள்ளியில் பயிலும் குழந்தைகளுடன் உதய்பூருக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து சனிக்கிழமை காலை ஒரு காரில் புறப்பட்டனர். 5 பெண் ஆசிரியைகள் மற்றும் 4 குழந்தைகளுடன் கிளம்பிய அந்தக் கார் கைராத் பகுதியில் வரும் போது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது.
 இந்த விபத்தில் ஆசிரியைகள் கீதா லடெüட்டி, மண்ஷா கோஸ்வாமி (28), சரோஜ் யாதவ் (30), மோனிகா கத்தீக் (22), டிரைவர் சந்தோஷ் ராஜ்புத் மற்றும் குழந்தைகள் 3 பேர் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை படுகாயமுற்ற நிலையில் உதய்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com