பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து 13ஆவது நாளாக இன்று செவ்வாய்கிழமையும் (அக்.30) குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 21 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகளும் எண்ணெய் நிறுவனங்களால் குறைக்கப்பட்டன. இந்த விலை குறைப்பைத் தொடர்ந்து, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.55 ஆகவும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.78 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.04-க்கு விற்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.32 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.65-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோல், எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுவது இது 13ஆவது நாளாகும்.
நாடு முழுவதும் பிற நகரங்களிலும் பெட்ரோல்-டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டது. இதைத் தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீதான கலால் வரியில் ரூ.2.50-ஐ மத்திய அரசு குறைத்தது. பிற மாநிலங்களையும் வாட் வரியை குறைக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டும் பெட்ரோல்-டீசல் விலை மீதான வாட் வரியை குறைத்தன. இதன்பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததையடுத்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. எனினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறையத் தொடங்கியதால், கடந்த 18 ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை இந்தியாவிலும் குறைக்கப்பட்டது.