ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், கட்டடத்துக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நட்சத்திர ஓட்டலின் மேல் தளத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பக்கத்துக் கட்டடங்களுக்கும் தீ பரவியதால் பதற்றம் ஏற்பட்டது.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.