அதிமுக அமைப்புச் செயலாளராக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.
இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன், செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
காட்டிக்கொடுத்துவிடுவார் என்ற பயத்தில்தான் விஜயபாஸ்கரை அதிமுக அமைப்புச் செயலாளராக்கியுள்ளனர். மின்தடையே இருக்காது என ஒரு அமைச்சர் கூறுகிறார். மற்றொருவர் நிலக்கரி கேட்டு கடிதம் எழுதுகிறார்.
மின் நிலைமை குறித்து முதலில் அவர்களுக்குள் பேசி முடிவு எடுக்கட்டும். தமிழகத்தின் நிலைமை குறித்து அமைச்சர்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இனி மின்தடையே இருக்காது என அமைச்சர் கூறிய நிலையில் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் என்றார்.