கோவா முதல்வராக மனோகர் பாரிக்கரே நீடிப்பார் - மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர்

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கரே நீடிப்பார் - மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர்

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கரே நீடிப்பார் என்று அம்மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கரே நீடிப்பார் என்று அம்மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவாவில் இன்று பாஜக முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியானது. அதனால், கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பாரா அல்லது நிர்வாக பொறுப்புகள் வேறு ஒருவருக்கு வழங்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்து வந்தன. 

இந்நிலையில், கோவா முதல்வராக மனோகர் பாரிக்கரே நீடிப்பார் என்று அம்மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் இன்று தெரிவித்தார்.

கல்லீறல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள மனோகர் பாரிக்கர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை முதல் சிகிச்சை பெற்று வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com