ஸ்ரீநகர்: ஹோட்டலில் தீ விபத்து

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஹோட்டலில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஹோட்டலில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
 இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்ரீநகரின் ரீகல் சௌக் பகுதியில் உள்ள 6 மாடிகள் கொண்ட ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டது. இது விறுவிறுவென அனைத்து தளங்களுக்கும் பரவியது. தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதிருஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com