மத்திய இடைக்கால நிதியமைச்சராக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின்பேரில், இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மருத்துவப் பரிசோதனைக்காக, கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். இதனிடையே, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. மத்திய இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும். ஆனால், இதனை தாக்கல் செய்வதற்காக, குறிப்பிட்ட தேதிக்குள் ஜேட்லி திரும்பிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நிதித் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஜேட்லி வகித்து வந்த நிதித் துறை மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை ஆகியவை பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

