நாடு முழுவதும் ரூ.377 கோடி பணம் பறிமுதல்: முதலிடத்தில் தமிழகம்! 

மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள 534 தொகுதிகளுக்கும், வரும் 11 ஆம் தேதி முதல் வாக்குப் பதிவு துவங்கி மே 19 ஆம் தேதி வரை 7
நாடு முழுவதும் ரூ.377 கோடி பணம் பறிமுதல்: முதலிடத்தில் தமிழகம்! 


புதுதில்லி: 17-வது மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப். 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளில், கணக்கில் வராத ரூ.377.115 கோடி ரொக்கப் பணம், ரூ.157 மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.705 கோடி மதிப்புள்ள மருந்து மற்றும் போதை பொருள்கள், ரூ.78 லட்சம் லிட்டர் மதுபான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ. 127.84 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள 534 தொகுதிகளுக்கும், வரும் 11 ஆம் தேதி முதல் வாக்குப் பதிவு துவங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும், தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து, ஏப். 3 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் நடத்திய அதிரடி சோதனைகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.377.115 கோடி ரொக்கப் பணம், ரூ.157 மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.705 கோடி மதிப்புள்ள மருந்து மற்றும் போதை பொருள்கள், ரூ.78 லட்சம் லிட்டர் மதுபான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக, ரூ.127.84 கோடி தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேபோல, ரூ.135.6 கோடி ரூபாய் மதிப்பிலான 884 கிலோ தங்கம் நகைகள், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 26 லட்சம் மதிப்பிலான மதுபானங்களும், ரூ.26 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களும், ரூ.6.19 கோடி மதிப்பிலான இலவசமாக கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஆந்திராவில் ரூ. 95.79 கோடி பணமும், ரூ.30.48 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று உத்திரபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் 78 லட்சம் லி்ட்டர் மதுபானங்களும், பஞ்சாபில் ரூ.116 கோடி மதிப்பிலான போதை பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவைத்தவிர ரூ. 312 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லட்சத்தீவு, மிசோரம் போன்ற இடங்களில் பணமே பிடிபடவில்லை. புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், போன்ற சிறிய மாநிலங்களில் ரூ.10 லட்சம், 20 லட்சம் என்ற அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

2014 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட பணத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பறிமுதல் செய்யப்பட்டவை 84 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் சுமார் 31,000 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது. தற்போது தேர்தலுக்கு முன்பாகவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள மதுபானங்கள் அளவில் 2 சதவீதம் மட்டுமே.

2014-ல் ரூ. 780 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டன, இது ஏறத்தாழ சுமார் ரூ.116 கோடி போதை மருந்துகள் பஞ்சாபில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் முற்போக்கான கைப்பற்ற எண்கள் ஆகும், அதாவது அது வரவிருக்கும் நாட்களில் மட்டுமே அதிகரிக்கும் என்றும், 50 நாட்களுக்கு மேலாக தேர்தலுக்கு முடிவடையும் என்ற உண்மையைக் கூறலாம்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தல் முடிவில் ரூ.299.94 கோடி பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த நிலையில், 17-வது மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க தங்கம் உள்ளிட்ட இலவசங்கள் அளிப்பதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதிகளவு உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு சென்றதில் 2வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது தமிழகம்.

அருணாச்சல பிரதேச முதல்வருடன் கட்சியினர் வந்த காரில் இருந்து ரூ.18 கோடியை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது. தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 கோடியே 47 லட்சத்து 100 பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக இவ்வளவு தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் முடிவடைய இன்னும் 50 நாட்களுக்கு மேலாக உள்ளதால் வரவிருக்கும் நாட்களில் பறிமுதல் செய்யப்படும் பணம், போதைப்பொருட்கள், மதுப்பானங்கள், பரிசுப்பொருட்களின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com