வயநாடு பிரசாரத்துக்கு முன் பாபநாசம் கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பூஜை செய்ய வாய்ப்புள்ளதாக கேரள காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், வியாழக்கிழமை (ஏப்.4) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா கூறுகையில்,
பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது அஸ்தியின் ஒரு பகுதி திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம் ஆற்றில் கரைக்கப்பட்டது. அச்சமயம் அப்போதைய கேரள முதல்வர் கே. கருணாகரன், முல்லபல்லி ராமச்சந்திரன் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் அந்த அஞ்சலியை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றனர் என்றார்.
இந்நிலையில், வயநாடு பிரசாரத்தை தொடங்கும் முன்பு பாவங்களைப் போக்கும் பாபநாசம் கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கேரள காங்கிரஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.