கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (ஏப்.4) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
இதுகுறித்து கோழிக்கோட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, தேர்தல் அதிகாரியிடம் காலை 11 மணிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். வேட்பு மனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்வதற்கு முன்பு, அவர் சாலை மார்க்கமாக பேரணியாக செல்லவுள்ளார். அதில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார் அவர்.
ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும், உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி கட்சி பொதுச் செயலாளருமான பிரியங்காவும் உடன் வரவுள்ளார்.