அத்வானி, ஜோஷியுடன் அமித் ஷா சந்திப்பு!

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். 
அத்வானி, ஜோஷியுடன் அமித் ஷா சந்திப்பு!

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். தில்லியில் உள்ள அவர்களது இல்லங்களில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

வருகிற மக்களவைத் தேர்தலில் இவ்விரு மூத்த தலைவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக அத்வானியின் காந்திநகர் தொகுதியில் தற்போது அமித் ஷா களமிறங்கவுள்ளார். அதுபோன்று கடந்த தேர்தலில் மோடிக்காக வாராணசி தொகுதியை விட்டுக்கொடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்பவது அனைவரும் அறிந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பாஜக வாக்குறுதி திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அப்போதும் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. மேலும், நாடு தான் முக்கியம், கட்சியும், சொந்த நலனும் அடுத்துதான் என சமீபத்தில் அத்வானி கருத்து தெரிவித்தபோது அதை பிரதமர் மோடி வரவேற்று பதிவிட்டிருந்தார். 

ஆனால், இது எதிர்கட்சிகளிடம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே பாஜக தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com