உ.பி.யில் சம்பவம்: முப்பது பேரின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை நீத்த செல்ல நாய்!

நாய், மனிதர்களின் மிக நெருங்கிய நண்பன் என்று எப்போதும் சொல்வதுண்டு. உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் அதை மீண்டும் மெய்ப்பித்துள்ளது.
file image
file image


பான்டா: நாய், மனிதர்களின் மிக நெருங்கிய நண்பன் என்று எப்போதும் சொல்வதுண்டு. உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் அதை மீண்டும் மெய்ப்பித்துள்ளது.

ஏப்ரல் 12ம், தேதி  நள்ளிரவு வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது தீப்பற்றியதைப் பார்த்த செல்ல நாய் விடாமல் குரைத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியது.

வீட்டில் இருந்தவர்கள் 30க்கும் மேற்பட்டோர் தீப்பற்றியதைப் பார்த்து வீட்டுக்குள் இருந்து வெளியேறினர். அவர்களை எல்லாம் குரைத்து எழுப்பிய நாயோ, கட்டப்பட்டிருந்ததால், அந்த சமயத்தில் எதிர்பாராதவகையில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், நாய் சம்பவ இடத்திலேயே பலியானது.

தங்களை எல்லாம் காப்பாற்றிய நாயை, தங்களால் காப்பாற்ற முடியவில்லையே என்று நினைத்து உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com