ஜாதி, மதங்களை முன் வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வெறுப்புப் பேச்சுகளை கொண்டு பரப்புரை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.