அம்பேத்கரை அவமதித்தவர்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிரசாரம் செய்வதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய அரசியல் மிகவும் தரம்தாழ்ந்து செல்வதற்கு மிகச் சிறந்த உதாரணம், அம்பேத்கரை அவமதித்தவர்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிரசாரம் செய்வதுதான். நாட்டை அவமதித்தவர்கள் நமது வாக்கை பெற தகுதியற்றவர்கள் என்றார்.