மக்களவைத் தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்று ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சியினருடன் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
எதிர்க்கட்சி கூட்டணியில் பிரச்னை நிலவுவது உண்மைதான். அதேநேரத்தில், மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறாது. 150 தொகுதிகளுக்கு மேல் அக்கூட்டணியால் வெற்றி பெற முடியாது.
அதேநேரத்தில், ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த வெற்றி, ஆயிரம் சதவீதம் உறுதியாகும் என்றார் சந்திரபாபு நாயுடு.