கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கிழக்கு தில்லி தொகுதியில் பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னாள் இந்திய அணி கேப்டன் கௌதம் கம்பீர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில், தில்லியை பூர்வீகமாகக் கொண்ட கௌதம் கம்பீருக்கு கிழக்கு தில்லி தொகுதியை பாஜக ஒதுக்கியது. இதையடுத்து அவர் அந்த தொகுதிக்கான வேட்புமனுவை செவ்வாய்கிழமை தாக்கல் செய்தார். அப்போது பாஜக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.