மோடியின் தலைமையில்தான் இந்திய ராணுவம் வலிமைமிக்கதாக மாறியது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் பஹராம்பூர், பாங்கௌன் பகுதிகளில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட யோகி ஆதித்யநாத் பேசியதாவது: மோடியின் தலைமையில்தான் இந்திய ராணுவம் வலிமைமிக்கதாக மாறியது. உதாரணமாக, பூடான் எல்லையில் உள்ள டோக்காலாமில் முகாமிட்டிருந்த சீன ராணுவம் ஊடுருவலில் ஈடுபட்டபோது, இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது.
அதேபோல, புல்வாமாவில் தாக்குதல் நடத்திய 72 மணி நேரத்துக்குள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பாலகோட்டில் புகுந்து தக்க பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம். காங்கிரஸ் 130 கோடி மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ராஜதுரோக குற்றச்செயலுக்கு எதிரான சட்டத்தை வாபஸ் பெறப் போவதாக தெரிவித்துள்ளது. இது நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு எதிரானது மட்டுமல்ல; பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயலும் ஆகும் என்றார் அவர்.