என்.டி.திவாரி மகன் மரணத்தில் திடீர் திருப்பம்: ரோஹித் திவாரி மனைவி கைது

மூச்சு அடைப்பு, ரத்த ஓட்டம் நிறுத்தம் ஆகியவை காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் ரோஹித் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
என்.டி.திவாரி மகன் மரணத்தில் திடீர் திருப்பம்: ரோஹித் திவாரி மனைவி கைது

உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரி அண்மையில் உயிரிழந்த நிலையில், அவரது உடல்கூறாய்வு அறிக்கை வெளியானது. 

மூச்சு அடைப்பு, ரத்த ஓட்டம் நிறுத்தம் ஆகியவை காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் ரோஹித் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

ரோஹித்தின் மூக்கில் ரத்தம் வடிந்து காணப்பட்டது. இதையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். பின்னர் அந்த வழக்கு குற்றப்புலனாய்வு காவல்துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், ரோஹித் திவாரியின் மனைவி அபூர்வா திவாரி, இந்த வழக்கு தொடர்பாக புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com