தேசப் பாதுகாப்புக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

தேசத்தின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன்  வாக்களித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.
ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன்  வாக்களித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.

தேசத்தின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் அவர், அத்தொகுதிக்குள்பட்ட ஆமதாபாத் நகரின் நரன்புரா பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்தார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. மூன்றாம் கட்டத் தேர்தலில் பெருவாரியான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பதைக் காண முடிகிறது. குஜராத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலுமே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று தகவல் கிடைத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், பொருளாதாரரீதியான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையிலும் மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும். நீங்கள் அளிக்கும் ஒரு வாக்குதான் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை உணர வேண்டும். இளைஞர்களும், முதல்முறையாக வாக்களிப்பவர்களும் இந்தியாவின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் முழுமையாக வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள காமேஸ்வர மகாதேவர் கோயிலுக்குச் சென்று அமித் ஷா வழிபட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com