வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துக்குள் பாம்பு..!

கேரள மாநிலம், கண்ணூர் மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துக்குள் சிறிய பாம்பு இருந்தது அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் அங்கு சிறிது நேரம்
வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துக்குள் பாம்பு..!

கேரள மாநிலம், கண்ணூர் மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துக்குள் சிறிய பாம்பு இருந்தது அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
கேரளத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது. கண்ணூர் மக்களவைத் தொகுதியில் இடதுசாரி கூட்டணியின் சார்பாக எம்.பி. பி.கே. ஸ்ரீமதி மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி சார்பில் கே. சுரேந்திரனும், பாஜக கூட்டணி சார்பில் சி.கே. பத்மநாபனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், அந்த தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துக்குள் சிறிய பாம்பு இருந்தது, அங்கிருந்த அதிகாரிகளையும் வாக்காளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.
வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த மக்களிடையே இந்த செய்தி பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. எனினும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பாம்பை இயந்திரத்துக்குள் இருந்து அகற்றினர். அதையடுத்து அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com