வடமேற்கு தில்லி பாஜக அதிருப்தி எம்.பி. உதித் ராஜ், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தார்.
வடமேற்கு தில்லி (தனி) மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்து வருபவர் உதித் ராஜ். தற்போதைய மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக வடமேற்கு தில்லி தொகுதியில் சிறப்பாக பணியாற்றி வந்த தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் கட்சி புறக்கணித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை உதித் ராஜ் புதன்கிழமை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலர் பி.வேணுகோபால்உள்ளிட்டோர் முன்னிலையில் உதித்ராஜ் அக்கட்சியில் இணைந்தார்.