அவதூறு வழக்கு: மே 9-இல் ஜெய்ராம் ரமேஷ் நேரில் ஆஜராக தில்லி நீதிமன்றம் உத்தரவு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல் தொடுத்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மே 9-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தில்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
அவதூறு வழக்கு: மே 9-இல் ஜெய்ராம் ரமேஷ் நேரில் ஆஜராக தில்லி நீதிமன்றம் உத்தரவு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல் தொடுத்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மே 9-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தில்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
முன்னதாக, கேரவன் இதழின் இணையதளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான கட்டுரையில், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்த பணத்தில் கேமன் தீவுகளில் விவேக் தோவல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது சுமத்துவதாக, கேரவன் இதழின் ஆசிரியர், அந்தக் கட்டுரையை எழுதிய செய்தியாளர், அந்தக் கட்டுரையை மேற்கோள்காட்டி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் விவேக் தோவல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 
அந்த வழக்கில் கேரவன் இதழின் ஆசிரியர், செய்தியாளர், ஜெய்ராம் ரமேஷ்  ஆகியோர் ஏப்ரல் 25-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு  தில்லி பெருநகர நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. 
அதன்படி, தில்லி பெருநகர நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி சமர் விஷால் முன்பு கேரவன் இதழின் ஆசிரியர், செய்தியாளர் ஆகியோர் வியாழக்கிழமை ஆஜராகினர். ஜெய்ராம் ரமேஷ் ஆஜராகாததற்காக அவரது சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. ஆஜரானவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, மே 9-ஆம் தேதி ஜெய்ராம் ரமேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com