எதிர்க்கட்சிகள் சார்பில் புதிய பிரதமர்:அகிலேஷ் யாதவ்

புதிய பிரதமரை எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாட்டுக்குத் தரும் என்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் புதிய பிரதமர்:அகிலேஷ் யாதவ்

புதிய பிரதமரை எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாட்டுக்குத் தரும் என்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவர் அஜித் சிங் ஆகியோருடன் இணைந்து கன்னோஜ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
எங்கள் கூட்டணி புதிய பிரதமரை நாட்டுக்குத் தரும். தங்களின் செயல்பாடுகள் குறித்தே பாஜகவால் எதுவும் பேச முடியாது. அதனால், எங்கள் கூட்டணியை பாஜகவால் எப்படி எதிர்க்க முடியும்.
சமூக நீதிக்காகவே இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது. சட்டமேதை அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, கன்ஷிராம், முலாயம் சிங் யாதவ் ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுவோம் என்றார் அகிலேஷ்.
உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைக் காட்டிலும் சமாஜவாதி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று அகிலேஷ் கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com