7 முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாஜக-வில் சனிக்கிழமை இணைந்தனர். தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இவர்கள் 7 பேரும் இணைந்தனர்.
எல்டி ஜெனரல் ஜேபிஎஸ் யாதவ், எல்டி ஜெனரல் ஆர்என் சிங், எல்டி ஜெனரல் எஸ்கே பட்யால், எல்டி ஜெனரல் சுனித் குமார், எல்டி ஜெனரல் நிதின் கோலி, கோலோனல் ஆர்கே திரிபாதி, டபள்யூஜி கமாண்டர் நவ்நீத் மாகோன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் இவர்கள் அனைவரும் பாஜக-வில் இணைந்துள்ளது தில்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ராணுவத் தளபதியாக இருந்த வி.கே.சிங் தனது பதவிக்காலத்துக்குப் பிறகு தன்னை பாஜக-வில் இணைத்துக்கொண்டார். அவர் தற்போது மத்திய அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.