நாடு முழுவதும் 17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் மூன்று கட்ட தேர்தல்கள் முறையே கடந்த 11, 18, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதுவரை 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்கிறது.
மகாராஷ்டிரம் (17 தொகுதிகள்), ராஜஸ்தான் (13), உத்தரப் பிரதேசம் (13), மேற்கு வங்கம் (8), மத்தியப் பிரதேசம் (6), ஒடிஸா (6), பிகார் (5), ஜார்க்கண்ட் (3) ஆகிய 9 மாநிலங்கள் அடங்கிய 72 தொகுதிகளில் 4-ஆவது கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி 49.53 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.