ம.பி., காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவு வாபஸ்: மாயாவதி மிரட்டல்  

ம.பி., காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவு வாபஸ்: மாயாவதி மிரட்டல்  

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

லக்னௌ: மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில் ஆட்சி புரியும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளித்து வருகிறது. காங்கிரசுக்கு இங்கு இருப்பது மிக மெல்லிய பெரும்பா ன்மையே ஆகும். 

இந்நிலையில் ம.பி., காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியின் சார்பாக குனா தொகுதிக்கு லோகேந்திர சிங் ராஜ்புத் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அவர் தற்போது மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் இணைந்து விட்டார். இதுதொடர்பாக லோகேந்திர சிங்  தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை சிந்தியா  ட்வீட் செய்திருந்தார்.

இதனால் அதிருப்தியடைந்த மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக’ தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com