இரண்டாகப் பிரிகிறது காஷ்மீர்: ராணுவம், விமானப் படை தயார் நிலையில் இருக்க உத்தரவு

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்ததை அடுத்து, ராணுவம், விமானப் படை தயார் நிலையில் இருக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாகப் பிரிகிறது காஷ்மீர்: ராணுவம், விமானப் படை தயார் நிலையில் இருக்க உத்தரவு


காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்ததை அடுத்து, ராணுவம், விமானப் படை தயார் நிலையில் இருக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி மெட்ரோ ரயில் உச்சபட்ச பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ரயில் பாதையும் ரெட் அலர்ட் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மெட்ரோ ரயில்நிலையத்துக்குள் செல்வோரும், வெளியேறுவோரும் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

காஷ்மீர் விவகாரம் காரணமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்பதால், எந்த குறிப்பிட்ட காரணத்தையும் கூறாமல், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதே சமயம், ராணுவமும், விமானப் படையும் எந்த சூழ்நிலையையும் கையாளும் விதத்தில் தயாராக இருக்குமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com