ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்படும். லடாக் யூனியன் பிரதேசம் சட்டப்பேரவை இல்லாததாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடனும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதனை அறிவித்தார். இதையடுத்து இவ்விரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில்10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.